'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் புகுந்த வீடு என்ற பெயரில் புதிய தொடர் ஒளிபரப்பாக உள்ளது. இந்திரா சவுந்திர ராஜன் கதை, திரைக்கதை எழுதியிருக்கும் இந்த தொடரை நித்தியானந்தம் இயக்குகிறார். கதைப்படி, தமிழாசிரியர் ராமநாதனின் ஒரே மகள் ராதா. தன் மனைவியை ராதா குழந்தையாக இருக்கும்போதே இழந்து விட்ட ராமநாதன் ஒரு தாயாய், தந்தையாய் ராதாவுக்கு செய்யவேண்டிய கடமையை செய்து திருமணத்துக்கு நாள் குறிக்கிறார். ஆனால் எதிர்பாராத விதமாய் அந்த திருமணம் தடைபட்டு மண மேடையில் மாப்பிள்ளையை போலீஸ் கைது செய்கிறது.
இந்த நிலையில் திருமணத்துக்கு வந்திருக்கும் தாசில்தார் ஜாதகக் கோளாறுள்ள தன் மகன் விசுவநாதனை இதுதான் சந்தர்ப்பம் என்று மேடையேற்றி தாலிகட்டச் செய்கிறார். நிம்மதியான வாழ்க்கை கிடைக்கும் என்ற கனவுடன் புகுந்த வீட்டில் அடியெடுத்து வைக்கும் ராதா, வீடு நிறைய உறவுகள் இருந்தும் ஆதரவின்றி அனாதை போல் வாழ நேரிடுகிறது. இருப்பினும் தன் தந்தையின் நிம்மதியை மனதில் கொண்டு புகுந்த வீட்டில் தான் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை மறைத்து எப்போதும் சந்தோஷமாக இருப்பது போல் காட்டிக் கொள்கிறாள். ராதா சந்தித்த பிரச்சினைகள் என்ன? அவற்றை எவ்வாறு எதிர்நோக்கி நடை போடுகிறாள் என்பது கதைக்களம். சத்யஜோதி பிலிம்ஸ் டி.ஜி.தியாகராஜன் தயாரிக்கும் இத்தொடர், திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது.