ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகை ரீமாசென்னுக்கும், டெல்லியைச் சேர்ந்த ஹோட்டல் அதிபர் ஷிவ்கரன் சிங்குக்கும் கடந்த மார்ச் மாதம் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பிறகு ரீமாசென் நடிக்க மாட்டார் என்று எதிர்பார்க்கபட்ட நிலையில், அவரது கணவர் தொடர்ந்து நடிக்க அனுமதி அளித்தார். இதை தொடர்ந்து கேங்க்ஸ் ஆப் வசிப்பூர் என்ற இந்திப் படத்தில் நடித்தார். அந்த படம் சமீபத்தில் ரிலீசானது. அதனை தனது குடும்பத்தினருடன் ஷிவ்கரன் சிங் சென்று பார்த்துள்ளார். அதில் படுக்கை அறை காட்சியில் ரீமாசென் படு கவர்ச்சியாக நடித்துள்ளது அவருக்கு மனவேதனையை அளித்துள்ளது. இதையடுத்து கவர்ச்சியாக இனி மேல் நடிக்கக் கூடாது என்று ரீமாசென்னுக்கு கணவர் தடை விதித்துள்ளாராம். இதனால் ரீமாசென் - ஷிவ்கரண்சிங் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து ரீமாசென் கூறியுள்ளதாவது, நான் நடித்த "கேங்க்ஸ் ஆப் வசிப்பூர்-2 படத்தில் படுக்கையறை காட்சியில் நடித்திருந்தது அவருக்கு பிடிக்கவில்லை. அவர் மனம் புண்பட்டுள்ளார். ஆனாலும் நடிப்பைத் தொடரப் போகிறேன், என்றார்.
தற்போது ரீமாசென் சொசைட்டி என்ற இந்தி படத்திலும் சட்டம் ஒரு இருட்டறை என்ற தமிழ் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.