தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
டைரக்டர் கவுதம் மேனனின் படைப்புகள் அவரது கதை சொல்லும் நேர்த்திக்காவும், கலை நயத்துடன் எடுக்கப்படும் விதத்துக்காகவும் மட்டுமின்றி இனிமையான இசைக்காவும் அனைத்து தரப்பட்ட மக்களாலும் பாரட்டப்படும். அதற்கு அவரின் மின்னலே படம் தொடங்கி விண்ணைத்தாண்டி வருவாயா வரையே சாட்சி. அந்தவரிசையில் ஜீவா-சமந்தா நடிப்பில் உருவாகும் நீ தானே என் பொன்வசந்தம் படத்திற்காக கவுதம் வாசுதேவ் மேனனுடன் இசைஞானி இளையராஜாவும் இணைவது இசை பிரியர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் இப்படத்திற்கான சாய்ந்து சாய்ந்து... என்ற பாடலை அப்பாவின் இசையில், யுவன் ஷங்கர் ராஜா பாடியிருக்கிறார்.
இதுகுறித்து யுவன் கூறியுள்ளதாவது, முதலில் அப்பா இசையில் எனக்கு பாட வாய்ப்பு கொடுத்த கவுதமிற்கு ரொம்ப நன்றி. நாங்கள் நினைத்து கூட பார்க்க முடியாத இசை. இதுதான் இசை... அப்பாவின் இசையில் இந்தப்பாட்டை நான் பாட கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.