ஷார்மியின் 12 வருடகலை சாதனை | "இந்தியில் நடிக்க நேரமில்லை | ஒரே படத்தில் மூன்று சரவெடி | சகுனம் பார்க்கும்வித்யா பாலன் | நான் கொஞ்சம் விவரமான பொண்ணுங்க...! | "நவ் யு சி மீ | "ஆசை ஆசை, அஜீத், விஜய் ஜோடியாக நடிக்க ஆசை | எனக்கு வீழ்ச்சி அல்ல, வளர்ச்சிதான்! - த்ரிஷா | இயக்குனராகிறார் மாஜி ஹீரோயின் ஸ்ரீப்ரியா! | நயன்தாராவும், டாப்சியும் ரொம்ப குளோஸ் |
தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நடிகை பத்மப்ரியா மீது பரபரப்பு புகார் கொடுக்கப்பட்டுள்ளது. மிருகம், தவமாய் தவமிருந்து, பட்டியல் போன்ற பல்வேறு படங்களில் நடித்தவர் நடிகை பத்மபிரியா. இவர் தற்போது நம்பர் 66 மதுரை பஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை டைரக்டர் எம்.ஏ.நிஷாத் தயாரித்து இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து வரும் நிலையில் டைரக்டர் எம்.ஏ.நிஷாத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நடிகை பத்மப்ரியா மீது புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார்.
அதில், நடிகை பத்மப்ரியா தனது மேனஜருக்கும் சம்பளம் வழங்க வேண்டும் என்று என்னிடம் கேட்டார். நான் அதற்கு மறுப்பு தெரிவித்ததால் அவர் படப்பிடிப்புக்கு வருவதில்லை. இதனால் எனக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதேபோல் நம்பர் 66 மதுரை பஸ் படத்தை பிரபலப்படுத்தும் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க மறுத்து விட்டார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று குறிப்பிட்டுள்ளார்.