விஷால் மீது நடவடிக்கை இல்லை! - நடிகர் சங்கம் | மாமனாருக்கு பதில் மருமகனை இயக்குகிறார் கே.வி.ஆனந்த்!! | சூதாட்ட சர்ச்சை; நடிகைகள் பக்கம் திரும்பும் போலீஸ்; கலக்கத்தில் தமிழ் நடிகைகள் | தாய்லாந்தில் படமாகும் விஸ்வரூபம்-2!! | அரசியலில் கலக்க வருகிறார் ப்ரீத்தி ஜிந்தா! | கொஞ்சம் வயதாகி வருவதால் இரவு நேரங்களில் இசையமைப்பதில்லை-ஏ.ஆர்.ரஹ்மான் | கேன்ஸ் படவிழாக்குழுவினரை கவர்ந்த ஐஸ்வர்யா ராய் மகள்! | ஷாங்காய் விழாவில் கமலின் பேசும் படம்! | சித்தார்த்துடன் மீண்டும் இணைகிறார் சமந்தா! | மரியானின் திகில் அலை இன்னமும் மனசுக்குள்ள அடிச்சிக்கிட்டேயிருக்கு! -சொல்கிறார் தனுஷ் |
பாலிவுட்டின் பிரபல சர்ச்சை மற்றும் கவர்ச்சி நடிகை வீணா மாலிக் பெங்களூருவில் 20 ஆயிரம் ரசிகர்களுக்கு மத்தியில் சிக்கி கொண்டார். இந்தியில் சக்க போடு போட்ட தி டர்ட்டி பிக்சர்ஸ் படம் கன்னடத்தில் ரீ-மேக் செய்யப்பட்டு வருகிறது. இதில் வித்யாபாலன் வேடத்தில் வீணாமாலிக் நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங்கிற்காக பெங்களூரு வந்து இருந்தார் வீணா மாலிக். அவர் வருவதை அறிந்து சுமார் 20 ஆயிரம் ரசிகர்கள் ஷூட்டிங் நடக்கும் இடத்தில் கூடிவிட்டனர். ஏராளமான ரசிகர்கள் குவிந்துவிட்டதால் அங்கு பெரியளவில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நிலைமை சரியில்லாததை உணர்ந்த டைரக்டர் உடனடியாக போலீஸ்க்கு தகவல் கொடுத்தார். போலீசார் ரசிகர்களை கலைந்து சொல்ல சொல்லியும் அவர்கள் செல்ல மறுத்துவிட்டனர். ஒருமுறையாவது வீணா மாலிக் எங்களை வந்து பார்க்க வேண்டும் என்று கோரினர். இதனையடுத்து வீணா மாலிக் ரசிகர்கள் முன்பு தோன்றினார். சிலர் அவரிடம் ஆட்டோகிராப் பெற்று சென்றனர். பின்னர் வீணா மாலிக்கை போலீசார் பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பதற்றம் நிலவியது.