பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது |
தொடர்ந்து இரண்டு மூன்று ஹீரோயின்கள் உள்ள கதையாக விஷாலுக்கு தேடி வருகிறது. தீராத விளையாட்டு பிள்ளை, சமர் படங்களை தொடர்ந்து அடுத்து விஷால் நடிக்க இருக்கும் எம்.ஜி.ஆர்., படத்திலும் அவருக்கு இரண்டு ஹீரோயின். அதில் ஒருவர் டாப்சி மற்றொருவர் வரலெட்சுமி. கலகலப்பு படத்தை தொடர்ந்து டைரக்டர் சுந்தர்.சி, விஷாலை வைத்து ஒரு படத்தை இயக்குகிறார். இதில் விஷாலுக்கு 3 வேடம். படத்திற்கு மத கஜ ராஜா என்றும், அதை சுருக்கமாக எம்.ஜி.ஆர்., என்றும் வைத்துள்ளனர்.
முன்னதாக இப்படத்தில் கோ கார்த்திகா தான் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால் சுந்தர்.சி, தன்னிடம் கூறிய கதை ஒன்று, அதை இப்போது மாற்றிவிட்டார். அதனால் என்னால் நடிக்க முடியாது. நான் விலகுகிறேன் என்று கூறிவிட்டார். இதனையடுத்து அந்த இடத்திற்கு டாப்சி ஒப்பந்தமானார். மேலும் இன்னொரு ஹீரோயினை நடிக்க தேர்வு நடந்த நிலையில் இப்போது வரலெட்சுமி சரத்குமார் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவர் ஏற்கனவே சிம்புவின் போடா போடி படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.