டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பாசில், சித்திக் போன்ற இயக்குனர்களிடம் பல படங்களில் உதவியாளராக பணியாற்றி, இப்போது, "செம்பட்டை என்ற படத்தில் இயக்குனராகி இருக்கிறார் ஐ.கணேஷ். விமல், விதார்த் ஆகியோருடன் இணைந்து கூத்துப்பட்டறையில், எட்டு ஆண்டுகளாக பயிற்சி பெற்ற திலீபன் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில், கவுரி நம்பியார் என்ற கேரள
புதுவரவு, நாயகியாக நடித்துள்ளார். இந்த கவுரி வேறு யாருமல்ல. "கோ பட நாயகி கார்த்திகாவின் பெரியப்பா மகள். அதாவது, கார்த்திகாவுக்கு அக்காள். "சினிமாவில் எனக்கு சீனியர் கார்த்திகா என்பதால், அவரிடமும், எனது சித்தியான, "அலைகள் ஓய்வதில்லை ராதாவிடமும் சினிமாவை கேட்டு தெரிந்து கொண்டே நடிக்க வந்துள்ளேன் என்கிறார் கவுரி. "இந்த, "செம்பட்டை படத்தில் உப்பு விற்கும் பெண்ணாக நடித்திருக்கிறேன். அண்ணன், தம்பி பாசத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த படத்தில், காதல்,
சென்டிமென்ட் இரண்டும் கலந்த கதாபாத்திரம் என்பதால், கதையோடு கலந்து நடித்துள்ளேன். அதனால், இந்த படம் திரைக்கு வரும் போது, எனது நடிப்பு பேசப்படும் என்று சொல்லும் கவுரி நம்பியார், "எனது சித்தி ராதா சொன்னது போல், இயக்குனர்கள், தயாரிப்பாளர்களை மதித்து நல்ல நடிகை என்ற பெயருடன் சினிமாவில்
நீடித்திருப்பேன் என்கிறார்.