டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
மீ டூ புகாரில் கவிஞர் வைரமுத்து மீது குற்றச்சாட்டு கூறியவர் பாடகி சின்மயி. தமிழ் சினிமாவை பரபரப்பாக்கியது இந்த குற்றச்சாட்டு. இதுதொடர்பாக காரசாரமான விவாதங்கள், பேட்டிகள் என பல கடந்தன. டப்பிங் யூனியனில் இருந்து சின்மயி அதிரடியாக நீக்கப்பட்டார்.
இந்நிலையில், ரூ 1.5 லட்சம் முன்பணம் கொடுத்து, மன்னிப்பு கடிதம் வழங்கினால் சின்மயியை மீண்டும் சேர்த்து கொள்வோம் என டப்பிங் யூனியன் கூறியிருக்கிறது.
இதைமேற்கோள் காட்டி சின்மயி டுவிட்டரில் கூறியிருப்பதாவது : தமிழ்நாட்டில், தமிழ் படங்களில் நான் வேலை செய்ய வேண்டும் என்றால் டப்பிங் யூனியனுக்கு மன்னிப்பு கடிதமும், ரூ.1.5 லட்சம் பணமும் செலுத்த வேண்டுமாம். 2006ம் ஆண்டு முதல் என்னை வைத்து டப்பிங் யூனியன் நிறைய வருவாய் ஈட்டியது. ஆனால் இப்போது என் வேலைக்கான உரிமையை பெற நான் ரூ.1.5 லட்சம் பணம் செலுத்த வேண்டியிருக்கிறது.
ஓரிரு படங்களில் டப்பிங் பேசிய பெரிய நடிகர்கள், இயக்குநர்கள் எல்லாம் ஆயுள்கால உறுப்பினர்களாக இருக்கின்றனர். 2006 முதல் டப்பிங் யூனியனில் நான் உறுப்பினராக இருக்கிறேன். ஆனால் இப்போது புதிய உறுப்பினராக்கப்படுகிறேன்.
டப்பிங் யூனியனிடமும், ராதாரவியிடமும் வலுக்கட்டாயமாக நான் மன்னிப்பு கேட்க வைக்கப்படுகிறேன். டப்பிங் யூனியனில் உறுப்பினராக வேண்டுமானால் சங்க விதிப்பிடி ரூ.2,500 செலுத்த வேண்டும், அப்படியிருக்கையில் ரூ.1.5 லட்சம் மற்றும் மன்னிப்பு என்ன காரணம் என தெரியவில்லை, வியப்பாக உள்ளது.
இவ்வாறு சின்மயி பதிவிட்டுள்ளார்.