'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள 'பேட்ட' படம் பொங்கலுக்கு வெளியாகிறது. அந்தப் படத்திற்குப் பிறகு ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கப் போவதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆனால், அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. அதற்கு ரஜினிகாந்த் கேட்கும் சம்பளம் தான் காரணம் என ஒரு தகவல் திரையுலகத்தில் உலா வந்து கொண்டிருக்கிறது.
ரஜினி கேட்கும் சம்பளத்தை கொடுக்க தயாரிப்பாளர்கள் யாரும் முன்வரவில்லை என்று கூறப்படுகிறது. 500 கோடி ரூபாய் செலவு செய்து எடுத்த 2.0 படமே சரியான லாபத்தைக் கொடுக்கவில்லை. அப்படியிருக்க படத்தின் பட்ஜெட்டைக் கணக்குப் போட்டுப் பார்த்து தயாரிப்பாளர்கள் பின்வாங்குவதாகத் தகவல்.
கடந்த மூன்று படங்களாக ஒரு படம் வெளியாவதற்குள்ளேயே அடுத்த பட படப்பிடிப்பை ஆரம்பித்த ரஜினிகாந்த், 'பேட்ட' படத்திற்குப் பிறகு அடுத்த படத்தை அறிவிக்க முடியாமல் இருந்து வருகிறார். மேலும், 'பேட்ட' படத்தின் வியாபாரமும், '2.0' படத்துடன் ஒப்பிடுகையில் மிகக் குறைவாகத்தான் நடந்து வருகிறதாம்.