பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது |
இந்திய சினிமாவின் மிகச்சிறந்த இயக்குனர்களை பட்டியலிட்டால் அதில் இயக்குனர் ஷங்கரும், இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலியும் முதல் 5 இடங்களுக்குள் இடம் பெறுவார்கள். சமீபத்தில் காபி வித் கரண் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குனர் ராஜமௌலியிடம், அந்த நிகழ்ச்சியை நடத்திய பாலிவுட் இயக்குனரும், தயாரிப்பாளருமான கரண் ஜோஹர், இதே பாலிவுட்டில் உங்களைப் போன்று சினிமாவைப் பார்க்க கூடிய குணாதிசயம் கொண்ட இயக்குனர் யார் என ஒரு கேள்வியை முன் வைத்தார்
அதற்கு ராஜமவுலி சற்றும் யோசிக்காமல் அப்படி யாரும் இல்லை என பதில் கூறி கரண் ஜோஹரை மட்டுமல்ல, நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் அனைவரையும் அதிர வைத்தார். பொதுவாக இதுபோன்ற கேள்விகளுக்கு யாராக இருந்தாலும் சமாளிப்பாக ஏதோ ஒரு பதிலை கூறுவது தான் வழக்கம் ஆனால் ராஜமவுலியை, இப்படி ஒரு பதிலை கூற வைத்தது அவரது கர்வமா இல்லை தன்னம்பிக்கையா அவருக்கே வெளிச்சம்