இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
நடிகர் அரவிந்த்சாமி, சினிமாவில் முக்கியத்துவத்தோடு இருந்தவர், திடீரென சினிமாவை விட்டு விலகிச் சென்றார். தனி ஒருவன் படத்தில் வில்லனாக நடித்து மீண்டும் பிரபலமானார். தொடர்ந்து படங்களில் நடித்து வரும் அவர், தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் குறித்து பேசியிருக்கிறார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது : நடிப்பது தான் என்னுடைய ஆசையாக இருந்தது. அதனால் தன் சினிமாவுக்கே வந்தேன். ஆனால், பெரிய ஸ்டார் ஆவேன் என்று ஒரு நாளும் நினைத்ததில்லை. அப்படியொரு நிலையை அடைய வேண்டும் என்ற விருப்பமும் இருந்ததில்லை. ஸ்டார் ஆனதால், என்னுடைய பிரைவசி பறிபோனது. அதனால்தான், போதும் என்று சினிமாவை விட்டு விலகினேன்.
அமெரிக்காவுக்கு சென்றேன். மாஸ்டர் படித்தேன். பின், தொழில் தொடங்கினேன். அந்த தொழில் பல நாடுகளிலும் வெற்றிகரமாகவே நடந்தது. ஆனாலும், ஒரு கட்டத்தில், அதையும் 2005ல் விட்டு விட்டேன். என் குழந்தைகள் தனியாக வளர வேண்டிய சூழல் இருந்ததால், அதை உடைத்து, அவர்களோடு இணைந்து வாழ்க்கையைத் தொடர்ந்தேன்.
சினிமாவுக்கு திரும்பவும் வர வேண்டும் என்ற எண்ணம், அப்போதும் கூட எனக்கு இல்லை. திடுமென கடல் படத்தில் நடிக்க வேண்டும் என்று மணிரத்னம் என்னை கூப்பிட்டார். மறுக்க முடியவில்லை. நடித்தேன். இருந்தாலும், படம் சரியாக போகவில்லை. தோல்வியை ஏற்க முடியவில்லை. கூடவே, இப்படியொரு தோல்வியோடு என்னுடைய வாழ்க்கை முடிந்துவிடக் கூடாது என்றும் நினைத்தேன். அதனால்தான், தொடர்ந்து நடிக்க முடிவெடுத்து, படங்களை வரிசையாக ஒப்புக் கொண்டு, நடிக்கத் துவங்கினேன்.
இவ்வாறு அரவிந்த்சாமி கூறியுள்ளார்.