மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
சிவகார்த்திகேயன் முதன்முதலாக தயாரித்து, கடந்த டிச., 21ம் தேதி திரைக்கு வந்த படம் கனா. அருண்ராஜா காமராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய வேடங்களில் நடிக்க, சிவகார்த்திகேயனும் சிறப்பு வேடத்தில் நடித்தார்.
பெண்கள் கிரிக்கெட் மட்டுமின்றி, விவசாயிகளின் கண்ணீர் கதையையும் சொன்ன இந்த கனா படத்திற்கு, ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்துள்ளனர்.
இதையடுத்து, கனா படத்தின் தயாரிப்பாளரான நடிகர் சிவகார்த்திகேயன், டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார். அதில், கனவை நனவாக்கிய ஒவ்வொருத்தருக்கும் நன்றி. எங்களை நம்பி தியேட்டர்களுக்கு வந்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி. கண்ணீர், சிரிப்பு, கைதட்டல் என ஒவ்வொன்றையும் கொடுத்த ரசிகர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி என்று தெரிவித்துள்ளார்.