ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கடந்தாண்டு ஆதி என்கிற சூப்பர் ஹிட் படத்தின் மூலம் மலையாள சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமான பிரணவ் மோகன்லால், தற்போது தனது இரண்டாவது படமான 'இருபத்தியொன்னாம் நூற்றாண்டு' படப்பிடிப்பை முடித்துவிட்டார். திலீப்பை வைத்து ராம்லீலா என்கிற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் அருண்கோபி இயக்கியுள்ளார். படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் தற்போது டப்பிங் பணிகள் துவங்கியுள்ளன.
பிரணவின் முதல்படமான 'ஆதி' கடந்தாண்டு ஜனவரி 26ல் வெளியாகி வெற்றி பெற்றது போல, இந்தப் படத்தையும் சென்டிமென்டாக வரும் ஜனவரி-26ல் வெளியிட இறுதிக்கட்ட பணிகளை துரிதமாக நடத்தி வருகிறார்கள். புலிமுருகன் பட தயாரிப்பாளர் தயாரித்துள்ள, இந்தப் படத்தில் பீட்டர் ஹெய்ன் ஆக்சன் இயக்குனராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.