தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தில் எப்போதுமே சிலபல பிரச்சினைகள், சர்ச்சைகள் இருந்து கொண்டே இருக்கும். அதிலும், கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் விஷால் தலைமையிலான அணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து பல மூத்த தயாரிப்பாளர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். அவர்கள் விஷால் தலைமையிலான தயாரிப்பாளர் சங்கம் எடுத்த எந்த ஒரு முடிவையும் ஏற்றுக் கொள்ளுவதில்லை.
நலிந்த தயாரிப்பாளர்களுக்கு நிலம் வழங்குவதற்காக இளையராஜா இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்த தயாரிப்பாளர் சங்கம் திட்டமிட்டு அதற்கான வேலைகள் நடந்து வருகின்றன. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இப்போது இதை மையமாக வைத்தே விஷாலுக்கு எதிரானவர்கள் எதிர்ப்பு வேலைகளைச் செய்து வருகின்றனர்.
தயாரிப்பாளர்களுக்குள் இருக்கும் இந்த சர்ச்சை விவகாரத்தில் இளையராஜா பெயரை தேவையில்லாமல் வம்பிழுப்பதாக இளையராஜா ரசிகர்கள் கருதுகிறார்கள். அதோடு, சில தினங்களுக்கு முன்பு, விஜய்யின் முன்னாள் மேனேஜர் ஆன தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் சில தயாரிப்பாளர்களைச் சேர்த்துக் கொண்டு இளையராஜாவின் ராயல்டி விவகாரத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
விஜய்யின் அப்பா எஸ்ஏ சந்திரசேகரன், தயாரிப்பாளர்களுக்குத்தான் ராயல்டி என்று பேட்டி கொடுக்கிறார். இவையனைத்துமே அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தயாரிப்பாளர் சங்கத் தேர்தலுக்காகத்தான் என்றே சொல்கிறார்கள். விஷால் தலைமையிலான நிர்வாகக்குழுவின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முடிவடைகிறது.
தயாரிப்பாளர் சங்கத்தின் தேர்தலுக்காக இளையராஜாவின் இப்படி தேவையில்லாமல் சர்ச்சைக்குள்ளாக்குவதை அவருடைய ரசிகர்கள் கடுமையாக சாடி வருகிறார்கள். அதனால், தயாரிப்பாளர்களுக்காக அவர் நடத்துவதாகச் சொல்லியிருக்கும் இசை நிகழ்ச்சியைக் கூட மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். ஆனால், சங்கத் தலைவர் விஷால், எப்படியும் இளையராஜா நிகழ்ச்சியை நடத்துவோம் என்று உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
தயாரிப்பாளர் சங்க அரசியலுக்காக, உலகமே போற்றும் இசைக் கலைஞரான இளையராஜாவுக்கு சிலரால் நடக்கும் அவமரியாதை ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல என இளையராஜா ரசிகர்கள் நினைக்கிறார்கள்.