தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் |
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தை இன்று(டிச.,19) ஒரு தரப்பினர் பூட்டு போட்டு, சங்கம் செயல்பட விடாமல் தடுத்து நிறுத்தினர். அதில் தயாரிப்பாளர் சங்கத்தின் உறுப்பினர்களான ராதாகிருஷ்ணன், டி.சிவா, சுரேஷ் காமாட்சி, ஏஎல்.அழகப்பன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். இந்த விவகாரம் திரையுலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
விஷால் சங்கப் பணத்தில் தில்லுமுல்லு செய்திருக்கலாம் என்ற குற்றச்சாட்டை அவர்கள் முன் வைத்தனர். பூட்டு போட்டபின் அதன் சாவியை முதலமைச்சரை சந்தித்து வழங்கப் போவதாகவும் தெரிவித்தனர்.
இது குறித்து தயாரிப்பாளர் சங்கத் தரப்பில் விசாரித்த போது, தயாரிப்பாளர் சங்கத்திற்கு பூட்டு போட்டவர்கள் மீது சட்டப்பட நடவடிக்கை எடுக்கப் போவதாகத் தெரிவித்தனர். அது தொடர்பான வேலைகள் தற்போது நடந்து வருவதாகவும், இது முற்றிலும் காழ்ப்புணர்ச்சியில் செய்யப்பட்ட ஒன்று என்றும் அவர்கள் தெரிவிக்கிறார்கள்.
மேலும், இளையராஜாவின் இசை விழாவை நடத்தி அதன் மூலம் கிடைக்கும் வருவாயில் நலிந்த தயாரிப்பாளர்களுக்கு வீட்டு மனைகளை வழங்க விஷால் திட்டமிட்டிருந்தாராம். அந்த விழா நடந்தால் விஷாலுக்கு நற்பெயர் கிடைத்துவிடும் என்ற காரணத்தால் அந்த விழாவை நடத்தவிடாமல் செய்ய வேண்டும் என்றும் எதிர்தரப்பினர் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கிறார்கள்.
நேற்று நடைபெற்ற கூட்டத்தில் 110 தயாரிப்பாளர்களுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து வழங்கியிருக்கிறார்கள். மேலும் இந்த மாதத்திற்கான தயாரிப்பாளர்களுக்கான பென்ஷன் சரியானபடி சென்று சேரக் கூடாது என்றும் எதிர்தரப்பினர் செயல்படுவதாக விஷால் தரப்பினர் கூறுகிறார்கள். அதோடு இன்று வந்தவர்களில் பலர் தயாரிப்பாளர்களே அல்ல, வேண்டுமென்றே ஒரு கூட்டத்தைக் கூட்டிக் கொண்டு வந்திருக்கிறார்கள் என்றும் விஷால் தரப்பு தெரிவிக்கிறது.
இன்று நடைபெற்ற பூட்டு போடும் விவகாரத்தில், ஒரு பிரபலமான டிவியின் தயாரிப்பு நிறுவனத்தில் பணமோசடி செய்து அங்கிருந்து விரட்டப்பட்டு, தற்போது ஒரு டிவியில் புதிய பொறுப்பேற்றுள்ள ஒரு பிரபலம்தான் காரணம் என்கிறார்கள்.