ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
விஜய் சேதுபதியின் சீதக்காதி டிசம்பர் 20-ந்தேதி(நாளை) வெளியாகிறது. டிசம்பர் 21-ந்தேதி தனுஷின் மாரி-2, ஜெயம் ரவியின் அடங்கமறு, சிவகார்த்திகேயனின் கனா உள்ளிட்ட ஐந்து படங்கள் வெளியாகின்றன. இப்படி ஒரே நாளில் பல படங்கள் வெளியாவதால் படங்களின் வெற்றி பாதிக்கும் என்றொரு கருத்து நிலவியபோதும் அதைப்பற்றி யாரும் கவலைப்படவில்லை.
சீதக்காதி படத்தின் பிரஸ்மீட்டில் விஜய் சேதுபதி பேசும்போது, சீதக்காதி வெற்றி பெற வேண்டும். அதேபோல் மாரி-2, அடங்கமறு, கனா போன்ற படங்களும் வெற்றிபெற வாழ்த்துகிறேன் என்று சொன்னார்.
அடங்கமறு பிரஸ் மீட்டில் ஜெயம் ரவியும் தன்னுடைய படத்துடன் மற்ற படங்களும் வெற்றி பெற வேண்டும் என்ற வாழ்த்து தெரிவித்தார்.
இப்படியான நிலையில், நேற்று தனுசும் மாரி-2 பிரஸ் மீட்டில், ஒரே நாளில் ஐந்து படங்கள் வெளிவருவது ஆரோக்யமான விசயமில்லை. இருப்பினும் அனைத்து படங்களும் வெற்றியடைய வாழ்த்துகிறேன் என்று தெரிவித்தார்.