ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
விஷால் பதவி விலக வேண்டும் என தயாரிப்பாளர்கள் போர்க்கோடி தூக்கி உள்ளனர். தயாரிப்பாளர் சங்க தலைவராக நடிகர் விஷால் உள்ளார். இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை தயாரிப்பாளர்கள் சுமத்தி வருகின்றனர். விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டு தனிச்சையாக முடிவு எடுக்கிறார். பொதுக்குழுவை கூட்டாமல் உள்ளார். சங்கநிதி ரூ.7.80 கோடியை முறைகேடு செய்துள்ளார் என பல்வேறு குற்றச்சாட்டுகளை தயாரிப்பாளர்கள் முன் வைக்கின்றனர்.
இன்று(டிச.,19) காலை தி.நகரில் உள்ள தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்திற்கு பூட்டு போட்ட எதிர்ப்பு தயாரிப்பாளர்கள், தொடர்ந்து பிலிம்சேம்பரில் இயங்கி வந்த தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்திற்கும் பூட்டு போட்டனர்.
அங்கு செய்தியாளர்களை சந்தித்த அழகப்பன், ரித்திஷ், ராதா கிருஷ்ணன் உள்ளிட்ட தயாரிப்பாளர் பேசியதாவது : சங்க நிதியான ரூ.7.80 கோடி என்ன ஆனது என்றே தெரியவில்லை. வாரத்திற்கு 4 படங்கள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இப்போது 7 படம், 8 படம் ரிலீஸ் செய்கின்றனர். இது என்ன நியாயம். பல கிரிமினல் குற்றங்களை விஷால் செய்துள்ளார். எல்லாவற்றுக்கும் அவர் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும். கர்நாடகத்தில் தமிழ் படங்கள் வெளியாக அனுமதி அளிப்பதில்லை, ஆனால் விஷால் கன்னட படத்தை இங்கு டப் செய்து வெளியிடுகிறார்.
துணை தலைவர்களான பிரகாஷ்ராஜ், கவுதம் மேனன் இருவரும் ஒருநாள் கூட சங்கத்திற்கு வந்தது கிடையாது. இப்படி இருப்பவர்கள் எதற்காக பதவிக்கு வர வேண்டும். நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிவடைந்துவிட்டது, இனி அவர்கள் உள்ளே நுழைய முடியாது. விஷால் ராஜினாமா செய்துவிட்டு சென்றால் குழு அமைத்து தயாரிப்பாளர் சங்கத்தை வழி நடத்துவோம். முதல்வரை சந்தித்து மனு கொடுக்க உள்ளோம். அதன்பின்னர் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.