Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு பூட்டு : விஷாலை கண்டித்து திடீர் போர்க்கொடி

19 டிச, 2018 - 13:08 IST
எழுத்தின் அளவு:
Producers-protest-against-Vishal-and-locked-the-Producer-council-office

சென்னை : தயாரிப்பாளர் சங்க தலைவராக இருக்கும் விஷாலை கண்டித்து, தயாரிப்பாளர்கள் சிலர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதோடு, சங்க அலுவலகத்திற்கும் பூட்டு போட்டனர்.

நடிகர் விஷால் நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளராக இருப்பதுடன், தயாரிப்பாளர்கள் சங்த்தின் தலைவராகவும் இருக்கிறார். சமீபகாலமாக இவருக்கு எதிராக மற்ற தயாரிப்பாளர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.

குறிப்பாக, மூத்த தயாரிப்பாளர்களுக்கான பென்ஷன் தொகையை முழுமையாக கொடுக்காதது, இன்சூரன்ஸ் காப்பீட்டுத் தொகையை குறைத்தது. செயற்குழு ஒப்புதல் இல்லாமல் விஷால் தனிச்சையாக முடிவெடுப்பது. இளையராஜாவிற்கு நடத்தப்படும் பாராட்டு விழா ஒப்புதல் இல்லாமல் நடத்துவது. க்யூப், யு.எப்.ஓ., நிறுவனங்கள் பிரச்னை, பைரசியை ஒழிக்காதது. பிலிம் சேம்பரில் உள்ள அலுவலகத்தில் தயாரிப்பாளர்கள் அலுவலம் செயல்படாமல், தனியாக மாதம் ரூ.3 லட்சம் வாடகை கொடுத்து செலவு செய்வது உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளை தயாரிப்பாளர்கள் முன் வைக்கின்றனர்.

சமீபத்தில், நடிகர் உதயா மற்றும் ஆர்.கே. சுரேஷ் ஆகியோர், திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் பொறுப்புகளை ராஜினாமா செய்தனர்.

இந்நிலையில், தயாரிப்பாளர்கள் ஏ.எல்.அழகப்பன், கே.ராஜன், டி.சிவா, ராதாகிருஷ்ணன், சுரேஷ் காமாட்சி, ஜே.கே.ரித்தீஷ், எஸ்வி.சேகர் உள்ளிட்ட தயாரிப்பாளர்கள் பலர் திடீரென, தி.நகரில் உள்ள தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களை சமாதானம் செய்ய செயலாளர் கதிரேசன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். யாரும் சமாதானம் ஆகவில்லை. இதையடுத்து, தயாரிப்பாளர்கள், சங்க அலுவலகத்திற்கு பூட்டு போட்டனர்.

செய்தியாளர்களிடம் பேசிய ரித்தீஷ், விஷால் கார்ப்பரேட் கம்பெனிகளின் அடிமையாகிவிட்டார். ஓராண்டுக்குள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்றால் பூட்டு போடுங்கள் என விஷால் சொன்னார். அவர் சொன்னபடி தயாரிப்பாளர்கள் சங்கத்தை பூட்டிவிட்டோம் என்றார்.

தயாரிப்பாளர் அழகப்பன் கூறுகையில், தயாரிப்பாளர்கள் சங்கத்தில் வைப்பு தொகையாக ரூ.7.80 கோடி பணம் இருந்தது. அந்தப்பணம் பற்றி கேட்டால் பதில் சொல்ல மறுக்கிறார்கள். இதிலிருந்தே அந்த பணம் இல்லையென்று தெரிகிறது. எத்தனை படங்களை வேண்டுமானாலும் ரிலீஸ் செய்யலாம் என்று சொல்வதற்கு எதற்கு தலைவர் பதவி. சின்ன தயாரிப்பாளர்கள் என்ன செய்வார்கள். தமிழ் ராக்கர்ஸ் உடன் விஷாலுக்கு கூட்டு இருக்கிறது என்றார்.

எஸ்வி.சேகர் கூறுகையில், முதல்வரை கூட பார்த்துவிடலாம், ஆனால் விஷால் பார்க்க முடியாது. முதல்வரை சந்தித்து முறையிட இருக்கிறோம். சங்கத்தை கலைத்துவிட்டு தேர்தல் நடத்த வேண்டும் என்றார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in