விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் |
தமிழ் சினிமாவின் பிரபல சவுண்டு என்ஜினியர் ஸ்டீபன் ராயல். முன்னணி இசை அமைப்பாளர்களுடன் சுமார் 200 படங்களில் பணியாற்றியவர், தற்போது இசை அமைப்பாளர் ஆகியிருக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது:
பொதுவாகவே சவுண்ட் என்ஜினியர்கள் பாதி இசை அமைப்பாளர்கள் தான். இசை அமைப்பாளராக வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. அதற்கான நேரம் வரட்டும் என்று காத்திருந்தேன். இப்போது வந்திருக்கிது. 4 படத்திற்கு இசை அமைக்கிறேன்.
சஞ்சய்ராம் இயக்கும் குற்றாலம் எனது முதல் படம். இதன் இசை உரிமத்தை சோனி நிறுவனம் வாங்கியிருப்பதே எனது முதல் வெற்றி. அடுத்து அதிர்ஸ்டம் 143, நெஞ்சில் ஒரு ராகம், பாசக்கார கூட்டம் படங்களுக்கு இசை அமைக்கிறேன். இதற்கு முன் பல இசை ஆல்பங்களை வெளியிட்டிருக்கிறேன்.
திமுக தலைவர் கருணாநிதி மறைந்தபோது காவியத்தலைவன் என்ற இசை ஆல்பம் வெளியிட்டேன். அது பெரும் வரவேற்பை பெற்றது. கருணாநிதி குடும்பத்தினர் என்னை வீட்டுக்கு அழைத்து கவுரவித்தனர். யாருடைய பாணியையும் பின்பற்றாமல் எனக்கென தனி பாணி அமைத்து செல்ல விரும்புகிறேன். என்றர்.