பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
'செக்கச் சிவந்த வானம்' வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, பிரபல நாவல் ஒன்றின் கதையை கருவாக வைத்து, புதிய படம் தயாரிக்கும் பணியில், இயக்குநர் மணிரத்னம் இறங்கி உள்ளதாகக் கூறப்படுகிறது.
ஏற்கனவே திட்டமிட்டு, ஏதோ ஒரு காரணத்தால் தள்ளிக் கொண்டே போன 'பொன்னியின் செல்வன்' கதையையே மீண்டும் மணிரத்னம் கையில் எடுத்திருக்கிறார். இந்தப் படத்தில் நடிகர்கள் விக்ரம், சிம்பு, ஜெயம் ரவி ஆகியோரை நடிக்க வைக்கவும் திட்டமிட்டிருக்கும் மணிரத்னம், அவர்கள் படத்தில் நடிப்பதற்கு முன், சம்பந்தப்பட்ட கேரக்டர்களில் நன்கு தயாராக வேண்டும் என்பதால், ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக பொன்னியின் செல்வன் கதையை அனுப்பி படிக்கச் சொல்லி இருக்கிறார்.
பிரம்மாண்டமாக தயாராக இருக்கும் இந்தப் படத்தை, அடுத்தாண்டு துவக்கத்தில் இருந்து துவங்கவும் மணிரத்னம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.