பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது |
சென்னை : நடிகர் ரஜினிகாந்த்தின் சம்பந்தியும், இயக்குநருமான கஸ்தூரி ராஜா, சினிமா பைனான்சியர் முகுந்த்சந்த் போத்ராவிடம் கடன் பெற்றார். இதற்காக கஸ்தூரி ராஜா, அளித்த செக், வங்கியில் பணமின்றி திரும்பி வந்தது. இதனால் போத்ரா, செக் மோசடி வழக்கு தொடர்ந்தார். கஸ்தூரிராஜா வாங்கிய கடனுக்கு நடிகர் ரஜினிகாந்த் உத்தரவாதம் கொடுத்தார். அதனால் கடன் கொடுத்தேன் என்று கூறியிருந்தார் போத்ரா.
இதையடுத்து ரஜினி, போத்ரா தன்னிடம் பணம் பறிக்கவே இப்படியொரு வழக்கை பதிவு செய்திருப்பதாக கூறினார். இதனால் ரஜினி மீது சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் போத்ரா.
இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு செய்தார் ரஜினி. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி ஆனந்த் வெங்கடேசன், ரஜினி மீது போத்ரா தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.