சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
மலையாளத்தின் பிரபல நடிகை லீனா மரியா பால். இவர், மோகன்லாலின் ரெட் சில்லீஸ், ஹஸ்பெண்ட்ஸ் இன் கோவா, உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர். மெட்ராஸ் கபே என்ற இந்தி படத்திலும் நடித்தவர். இவர் மீது ஏகப்பட்ட சர்ச்சைகள் உண்டு. சென்னையில் ஒரு வங்கியில் 18 கோடி ரூபாய் மோசடி செய்ததாக, போலீசாரிடம் சிக்கியவர்.
இவர் கொச்சியில் பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார். அந்த பியூட்டி பார்லர் நோக்கி இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர், பார்லரை நோக்கி துப்பாக்கியால் சுட்டு விட்ட சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சமயத்தில், மரியா பால், அங்கு இல்லை. பார்லரில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பெண்கள் மட்டும்தான் இருந்தனர்.
இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தைத் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். அப்போது, 'மும்பையைச் சேர்ந்த மாபியா கும்பல் தலைவன் ரவி புஜாரா, எனக்கு போன் செய்து 25 கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டினான். நான், இது குறித்து ஏற்கனவே போலீசில் புகார் செய்திருக்கிறேன். பணம் கொடுக்காமல், புகார் கொடுத்த ஆத்திரத்தில், புஜாராவின் ஆட்கள்தான், என்னை மிரட்ட துப்பாக்கி சூடு நடத்தி இருக்க வேண்டும்' என மரியா பால் கூறியிருக்கிறார்.
அதை வைத்து, அந்த கோணத்திலேயே கொச்சி போலீசார் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில், லீனா மரியா பாலுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.