'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பொங்கலுக்கு வெளியாக இருக்கும் 'பேட்ட' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சமீபத்தில் நடந்தது. அந்த நிகழ்ச்சியில் படத்தில், ஜித்து என்ற வில்லன் கேரக்டரில் நடித்திருக்கும் பிரபல நடிகர் விஜய் சேதுபதியும் கலந்து கொண்டார்.
விழா தொகுப்பாளர்கள், படத்தின் நடித்தவர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள் என எல்லோரையும் பேச வைத்தனர். அப்போது, ரஜினியின் படங்களில் தங்களுக்கு பிடித்த வசனத்தை பேசிக் காட்டலாம் என கூறினர்.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட அனைவரும், ரஜினி நடித்த படங்களில் தங்களுக்குப் பிடித்த வசனங்களை மேடையில், பேசிக் காட்டி கைத்தட்டல் வாங்கினர். ஆனால், மைக் பிடித்த நடிகர் விஜய் சேதுபதி, கடைசி வரை, ரஜினி பட வசனம் எதையும் பேசவில்லை. ஆனால், நடிகர் ரஜினியை பாராட்டி பேசினார்.
'ஏன் இப்படி செய்தீர்கள்?' என நிருபர்கள் கேட்டபோது, 'தெரியாத எதையும் நான் எப்போதும் செய்ய மாட்டேன். நான் எப்போதும் நானாகவேதான் இருக்க ஆசைப்படுவேன். என்னை, எனக்கேற்ற கேரக்டரில் நடிக்கச் சொன்னால் மட்டுமே என்னால் சிறப்பாக நடிக்க முடியும். இன்னொருவர் போல பேசு; நடி என்றால், அது என்னால் முடியாது. நான் ஏற்கனவே கூத்துப்பட்டறையில் நடிப்பு பயிற்சி பெற்ற போது, அங்கு நடிப்புக்காக வரும் பலரும் ரஜினியைப் போல நடித்துக் காட்டுவர். அதை நான் வியப்பாகத்தான் பார்ப்பேன். ஒரு நாளும், அப்படியெல்லாம் நடித்ததில்லை' என கூறியிருக்கிறார்.