ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கஜா புயலினால் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதி மக்களை சந்தித்து ஆறுதல் மற்றும் நிவாரணங்களை வழங்கிய நடிகரும், மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்ஹாசன், மூன்றாம் கட்டமாக கொடைக்கானலில் பாதிப்படைந்த பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.
கொடைக்கானில், குருசரடி, பெருமாள் மலை, கோரன் கொம்பு, மங்களக்கொம்பு, குரங்கனிப்பாறை, கடைசிக்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாகனம் மூலமும், சில இடங்களில் நடந்து சென்றும் பார்வையிட்டு, அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். பல ஊர்களில் நிவாரணமும் வழங்கினார்.
செய்தியாளர்களிடம் பேசிய கமல், எங்கள் கொள்கையே சென்ட்ரிசம், மக்களுக்கு எது நல்லது, எது நியாயம் என்று படுகிறதோ அதை நோக்கி நாங்கள் பயணித்துக் கொண்டிருக்கின்றோம். அது மட்டும் தான் எங்களுடையே ஒரே கொள்கை. மக்களின் பிரச்சனைகளை மக்கள் நீதி மய்யம் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கும். மக்களின் பிரச்னைகள் மிக முக்கியமானதாக இருக்கிறது. கருணாநிதிக்கு மரியாதை செலுத்துவதற்கு எனக்கு இன்னும் நிறைய வாய்ப்புகள் கிடைக்கும் என்றார்.