'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் |
நடிகர் சிவகார்த்திகேயன் 'கனா' படத்தின் மூலம் தயாரிப்பாளர் நிலைக்கு தன்னை உயர்த்திக் கொண்டு விட்டார். பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் நடிகர் சத்யராஜோடு, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷும் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தில், நடிகர் சிவகார்த்திகேயனும் நெல்சன் திலீப்குமார் என்ற பெயரோடு, ஒரு கேரக்டரில் நடித்துள்ளார். அது படத்தின் மிக முக்கிய கேரக்டராக இருக்கிறது. அந்த கேர்க்டருக்கு நெல்சன் திலீப்குமார் என, சிவகார்த்திகேயன் தான் பெயரிட்டிருக்கிறார். அது ஏன் என்ற தகவல் இப்போது வெளியாகி இருக்கிறது.
நெல்சன் திலீப்குமார் என்பவர், நடிகர் சிவகார்த்திகேயனுக்கு நெருக்கமான நண்பர். இருவரும், ஏற்கனவே விஜய் டிவியில் பணியாற்றியபோது நெருக்கமான நண்பர்களாகினர். அதன்பின், சிவகார்த்திகேயன் நடிகராக சினிமா உலகுக்கு வந்துவிட, நெல்சன் திலீப்குமாரும், இயக்குநராக சினிமாவுக்கு வந்து விட்டார்.