‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
தமிழ் சினிமாவின் முதல் பிரம்மாண்டமான திரைப்படம் என்ற பெயரைப் பெற்ற '2.0' படம் கடந்த நவம்பர் 29ம் தேதி வெளியானது. பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் இந்தப் படம் வெளியாகாததால் தமிழ்நாட்டில் எதிர்பார்த்த வசூலைப் பெற முடியவில்லை. ஹிந்தியில் மட்டுமே இந்தப் படம் 200 கோடி ரூபாய் வசூலைப் பெற்று சாதனை புரிந்துள்ளது.
தெலுங்கிலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால், படம் வாங்கப்பட்ட விலை அதிகம் என்பதால் ஒரு ஏரியாவைத் தவிர மற்ற ஏரியாக்களில் நஷ்டம் வரும் என்கிறார்கள். 72 கோடி ரூபாய் கொடுத்து வாங்கப்பட்ட இந்தப் படம் இதுவரையில் 52 கோடி ரூபாயை ஷேர் ஆகத் தந்துள்ளது. 72 கோடி ரூபாயை வசூலிக்க இன்னும் 20 கோடி தேவை. ஆனால், மூன்று வாரங்கள் ஆகிவிட்டதால் படத்தின் வசூல் தற்போது குறைந்துவிட்டது. அதனால், பாக்கித் தொகையான 20 கோடி வசூலிக்க வாய்ப்பில்லை.
தெலுங்கின் முக்கிய ஏரியாவான நிஜாம் ஏரியாவில் மட்டும் 2.0 படம் 23 கோடி ஷேர் கொடுத்துள்ளது. அந்த ஏரியாவில் மட்டும் வாங்கிய தொகைக்கும் அதிகமான ஷேர் கிடைத்து படம் லாபத்தைக் கொடுத்துள்ளதாக டோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.