‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனைமரத்தில் நெறிகட்டுமா என கேட்பதுண்டு.. அதை மெய்ப்பிப்பது போல வேன் உரிமையாளர் சங்கம் நடத்திய ஸ்ட்ரைக்கானது பிரபல பாலிவுட் நடிகரான அக்சய் குமாரை இயற்கை உபாதையை கழிக்க இடம் தேடி அலையவைத்து, ரொம்பவே அவஸ்தை படுத்தி விட்டது.
ஆம்.. அக்சய் குமார் தற்போது, 'கேசரி' என்கிற படத்தில் நடித்து வருகிறார். மகாராஷ்டிர மாநில அரசு திடீரென வாகன வரியை, மற்ற மாநிலங்களை விட பல மடங்கு உயர்த்தியதை எதிர்த்து அனைத்து வேன் உரிமையாளர் சங்கங்களும் ஒன்றாக இணைந்து ஸ்ட்ரைக் அறிவித்தனர். அதனால் அக்சய் குமார் நடிக்கும் 'கேசரி' படத்தின் படப்பிடிப்புக்கு வரவேண்டிய கேரவன் வரவில்லை.
படப்பிடிப்பு ஒய்வு நேரத்தில் காற்றாட வெளியே உட்கார்ந்துகொண்ட, அக்சய் குமார், இயற்கை உபாதையை கழிக்க கேரவன் இல்லாததால் ரொம்பவே அவஸ்தைப்பட்டு விட்டாராம். வெளிப்புற படப்பிடிப்பு என்பதால் மேக்கப் ரூமை உருவாக்கியவர்கள், கழிப்பறையை உருவாக்கவில்லை.. பின் படக்குழுவில் உள்ளவர்கள் சற்று தொலைவில் உள்ள ஸ்டுடியோ ஒன்றுக்கு அக்சய் குமாரை அழைத்து சென்று இயற்கை உபாதையை கழிக்க அவருக்கு ஏற்பாடு செய்து தந்தார்களாம்.