'ஆடு' படத்தின் மூன்றாம் பாகம் அறிவிப்பு | அனுபம் கெர் படத்திற்கு இசையமைக்கும் மரகதமணி | சூர்யாவின் 'புறநானூறு' தள்ளிப் போகிறதா? | ராம்சரணை தொடர்ந்து கியாரா அத்வானியின் கேரக்டர் லுக்கும் லீக் ஆனது | கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் |
ரிலீஸுக்கு முன்பே மிகுந்த எதிர்பார்ப்புக்கு ஆளாகும் படங்கள், அந்த சுமையினாலேயே பெரும்பாலும் அந்த எதிர்பார்ப்பை ஈடுகட்ட தவறும் நிகழ்வுகள் சினிமாவில் அதிகம் நிகழ்வதுண்டு. மலையாளத்தில் வெளியான மோகன்லால் நடித்த 'ஒடியன்' படமும் அப்படித்தான். மிக பிரமாண்டமாக உருவான இந்தப்படம் மோகன்லாலின் புலி முருகன் படத்திற்கு பிறகு அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படமாக அமைந்தது.
ஆனால் அறிமுக இயக்குனர் ஸ்ரீகுமார் மேனன் இதை சரியாக ரசிகர்களுக்கு கொண்டுசெல்ல தவறிவிட்டார் என்றே பலரும் சொல்கிறார்கள். சமீபத்தில் படம் ரிலீஸாவதற்கு முன் ஒரு பேட்டியில் மோகன்லால் பேசியபோது, “இந்தப்படத்தில் பாடல்கள், சண்டைக்காட்சிகள் என எல்லா அம்சங்களும் இருகின்றன. ஆனால் இது ஒரு பாவம் படம்.. மிகப்பெரிய மேஜிக் எல்லாம் இல்லை. வழக்கமான ஒரு கிராமத்தை பற்றிய கதை தான்” என கூறியிருந்தார்.. ஆனால் அவர் தன்னடக்கத்துடன் சொல்கிறார் என நினைத்தவர்களுக்கு, படம் பார்த்தபின்னர் தான், அவர் சூசகமாக படத்தை பற்றி சொன்னதே புரியவந்ததாம்.