தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
'சீமராஜா' படத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடித்து வரும் படத்தை ராஜேஷ் இயக்கி வருகிறார். இப்படத்தின் நாயகியாக நயன்தாரா நடிக்கிறார். பல வெற்றிப் படங்களைக் கொடுத்த ஸ்டுடியோ க்ரீன் இப்படத்தைத் தயாரித்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக ஐரோப்பா கண்டத்தில் உள்ள அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது. அந்தப் படப்பிடிப்பில் சிவகார்த்திகேயன், நயன்தாரா கலந்து கொண்டு நடித்து வருகிறார்கள். அங்கு சில காட்சிகளும், பாடல் காட்சிகளும் படமாகி வருகிறதாம்.
இந்தப் படத்தின் படப்பிடிப்புடன், சிவகார்த்திகேயன் 'இன்று நேற்று நாளை' படத்தின் இயக்குனர் ரவிகுமார் இயக்கத்தில் சயின்ஸ் பிக்ஷன் படப்பிடிப்பில் நடித்து வருகிறார். அடுத்து ஜனவரி மாதத்தில் 'இரும்புத் திரை' மித்ரன் இயக்கும் படத்தில் கலந்து கொள்கிறார். அதற்குள் ராஜேஷ் இயக்கும் படத்தை முடித்துவிடுவார் என்கிறார்கள். அதற்குப் பிறகு நயன்தாராவின் மனம் கவர்ந்த விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வெளிநாட்டு படப்பிடிப்பிற்கு சென்றுள்ளதால்தான், நேற்று நடைபெற்ற 'கனா' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பிலும் சிவகார்த்திகேயன் கலந்து கொள்ளவில்லை. 'கனா' படத்தை சிவகார்த்திகேயன் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.