ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
600 கோடி ரூபாய் தயாரிப்பில் உருவான படம் என்ற பெயரைப் பெற்ற 2.0 படம் கடந்த நவம்பர் மாதம் 29ம் தேதி வெளியானது. முழுமையாக இரண்டு வாரங்களைக் கடந்துள்ள இந்தப் படத்தின் வசூல் 700 கோடியைக் கடந்துள்ளதாகவும் தகவல் பரவியுள்ளது. அதே சமயம் சுமார் 550 கோடி மட்டுமே இதுவரை வசூலித்துள்ளது என்ற ஒரு தகவலும் உண்டு. தயாரிப்பு நிறுவனம் சொல்வது உண்மையா என்பதும் பற்றிய விவாதங்களும் திரையுலக வட்டாரங்களில் எழுந்து வருகிறது.
ஹிந்தியில் விடுமுறை நாட்களான இன்றும், நாளையும் வசூலிக்கும் தொகையை வைத்து இந்தப் படம் 200 கோடி ரூபாய் வசூலைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தமிழ், தெலுங்கு வசூலை விட ஏறக்குறைய இரண்டு மடங்கு அதிகம்.
தமிழ்நாட்டில் இந்தப் படம் இதுவரையில் சுமார் 90 கோடியையும், தெலுங்கிலும் அதே அளவிலும் வசூலித்திருக்கும் என்கிறார்கள். டிசம்பர் 21ம் தேதி புதிய படங்கள் வெளிவர உள்ள நிலையில் அதற்குள் தமிழ்நாடு, ஆந்திராவில் இப்படம் 100 கோடி வசூலைக் கடக்கும் என்று நம்பப்படுகிறது.
டிசம்பர் 21க்குப் பிறகு 2.0 படம் அதிக தியேட்டர்களில் ஓடுவது சந்தேகம்தான். அதற்குள் என்ன வசூலாகிறதோ அதுதான் இப்படத்தின் மொத்த வசூல் தொகையாக இருக்கும். மொத்த கணக்கின் அடிப்படையில் இந்தப் படம் ஹிந்தியில் நல்ல லாபத்தையும், தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானாவில் பத்து சதவீத நஷ்டத்தையும் தரும் என்பதே உண்மை நிலைமை என்கிறார்கள். இந்தப் பட நஷ்டத்தை தயாரிப்பு நிறுவனம் அடுத்தடுத்து வெளியீடுகளில் சரி செய்துவிடும் என்று படத்தை வாங்கியவர்கள் நம்புகிறார்கள்.