டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
2015ம் ஆண்டு வெளிவந்த மலையாளப் படமான 'பிரேமம்' படம் மூலம் மலையாள ரசிகர்களை அதிகம் கவர்ந்த நடிகையானவர் சாய் பல்லவி. அந்தப் படத்திற்காக மலையாளத்தில் பல்வேறு விருதுகளை வாங்கிக் குவித்தார். அதன்பின் தெலுங்கிலும் அறிமுகமாகி அங்கும் தனது நடிப்பால் அசத்தினார். மலையாளம், தெலுங்கு அறிமுகங்களை முடித்துவிட்டுத்தான் தமிழ் பக்கம் வந்தார்.
விஜய் இயக்கிய 'தியா' படத்தில் அறிமுகமானார். அந்தப் படம் வந்த சுவடு தெரியாமல் தியேட்டரை விட்டுப் போனது. தற்போது அவர் நாயகியாக நடித்துள்ள இரண்டாவது படமான 'மாரி 2' படம் அடுத்த வாரம் வெளியாக உள்ளது. இப்படத்தின் டிரைலர், மூன்று பாடல்கள் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இருப்பினும் சாய் பல்லவியை ஒரு தரப்பினர் கடுமையாக கிண்டலடித்து வருகிறார்கள்.
அவரை 'எமோஷன் குயின்' என வர்ணித்து, கீர்த்தி சுரேஷுடன் ஒப்பிட்டு பல மீம்ஸ்கள் ஏற்கெனவே வெளியாகியுள்ளன. மீம்ஸ் கிரியேட்டர்களிடம் அதிகம் சிக்கிய நடிகை கீர்த்தி சுரேஷ். அவருக்கடுத்து இப்போது புதிதாக சிக்கியுள்ளவர் சாய்பல்லவி. இருவருமே அவர்கள் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்களில் கொஞ்சம் ஓவராகவே நடிக்கிறார்கள் என்ற கருத்து அந்த மீம்ஸ்களில் இடம் பெற்றுள்ளது.
'மாரி 2' படம் வெளிவந்த பின்தான் சாய்பல்லவியின் நடிப்பு எப்படி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெறப் போகிறது என்பது தெரிய வரும். அதுவரை இப்படிப்பட்ட மீம்ஸ்கள் பரவுவதைத் தடுக்க முடியாது.