மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் |
விக்ரம் வேதா, ஸ்கெட்ச் உள்ளிட்ட தமிழ்ப்படங்களில் வில்லனாக நடித்து புகழ்பெற்றவர் மலையாள நடிகர் ஹரீஷ் பெராடி. சமூக, மற்றும் அரசியல் விஷயங்களில் அவ்வப்போது துணிச்சலாக, அதேசமயம் நையாண்டியுடன் கருத்து சொல்வதிலும் வல்லவர். சமீபத்தில் திருவனந்தபுரத்தில் ஒருவர் கொல்லப்பட்டதை கண்டித்து கேரளாவில் ஒரு கட்சியினர் பந்த் நடத்த அழைப்பு விடுத்திருந்தனர்.
இதை குறிப்பிட்டு பேசியுள்ள நடிகர் ஹரீஷ் பெராடி, “இந்த பந்த்தினால் எதிர்பாராமல் பயண வழியில் சாப்பிட எதுவும் கிடைக்காமல் மாட்டிக்கொண்டவர்களுக்கு ஒரு யோசனை சொல்கிறேன். வழக்கம்போல பந்த் அன்று பால் மற்றும் செய்தித்தாள்கள் விநியோகம் பாதிக்கப்படாது. அதனால் முதலில் பாலை வாங்கி, கிடைக்கும் ஏதாவது ஒரு செய்தித்தாளை அதில் தொட்டு சாப்பிடுங்கள்.. பசி ஆறிவிடும்” என கிண்டலாக கருத்து கூறியுள்ளார்.