‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா |
சர்கார் பட விவகாரத்தால் எழுத்தாளர் சங்க தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்த பாக்யராஜ், மீண்டும் அந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவராக கே.பாக்யராஜ் பொறுப்பு வகித்தார். முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடித்த சர்கார் படம், கதை திருட்டில் சிக்கியபோது, அந்த கதைக்கு உரிமை கொண்டாடிய வருண் ராஜேந்திரன் பக்கம் நியாயம் இருந்ததால் அவருக்கு ஆதரவாக நின்றார் பாக்யராஜ். இந்த விவகாரம் கோர்ட் வரை சென்று இறுதியில் சர்கார் படத்தின் டைட்டில் கார்டில் வருண் ராஜேந்திரனுக்கு நன்றி தெரிவிக்கும் அறிவிப்பு வெளியானது. இந்த சம்பவத்திற்கு பிறகு பாக்யராஜ், தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார். சர்கார் கதை திருட்டு விவகாரத்தில் தனக்கு ஏற்பட்ட நெருக்கடி காரணமாக ராஜினாமா செய்வதாக அறிவித்தார். ஆனால் இவரின் முடிவை மற்ற நிர்வாகிகள் ஏற்கவில்லை.
சங்கத்தின் மற்ற முக்கிய பொறுப்புகளில் இருந்த, மனோஜ் குமார், யார் கண்ணன், விக்ரமன், செல்வமணி உள்ளிட்ட 21 பேர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். இதனால் அதிர்ச்சியான பாக்யராஜ், தனது முடிவை மாற்றிக் கொண்டார். மீண்டும் எழுத்தாளர் சங்க தலைவராக பொறுப்பேற்றார். இந்த தகவலை, கோகோ மாக்கோ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் உறுதி செய்தார் பாக்யராஜ்.