தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கதை, வசனகர்த்தா, இயக்குனர், தயாரிப்பாளர் வி.சி.குகநாதன். 1968ம் ஆண்டு மக்கள் திலகம் எம்.ஜி.ஆரால் சினிமாவுக்கு கொண்டு வரப்பட்டவர். புதிய பூமி படத்தின் கதையை எழுதியவர். இயக்குனர், வசனகர்த்தா, காதாசிரியராக 250 படங்களில் பணியாற்றி உள்ளார். பல்வேறு படங்களை இயக்கியும் உள்ளார். எஸ்.பி.முத்துராமனை கனிமுத்து பாப்பா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகப்படுத்தியவர். 51 படங்கள் வரை தயாரித்தவர்.
கடைசியாக ராஜ்கிரண் நடிப்பில் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை கதையை பொன்மனச் செம்மல் என்ற பெயரில் படமாக இயக்க இருந்தார். அந்த முயற்சி நின்று விட்டது. இப்போது சினிமாவிற்கு வந்து 50வது பொன் விழா ஆண்டையொட்டி மீண்டும் சினிமாவுக்கு வந்திருக்கிறார்.
தேன்நிலவில் மனைவியை காணோம் என்ற படத்திற்கு கதை, வசனம் எழுதியிருக்கிறார். இதனை விஜய் தேசிங்கு என்ற புதுமுகம் இயக்குகிறார். அபிராமி ராமநாதன், ஆரூரான், ஜெயா ஆகியோர் தயாரிக்கிறார்கள்.