டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
நடிகர் ரஜினிகாந்த் நடித்து, கடந்த நவ.,29ம் தேதி வெளியான 2.0 படம், உலகம் முழுக்க வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்தப்படியாக பேட்ட படம் பொங்கலுக்கு வெளியாகிறது. நேற்று, ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு பேட்ட டீசரை வெளியிட்டனர். வெளியான 24 மணிநேரத்தில் 72 லட்சத்திற்கும் அதிகமான பேர் யு-டியூப்பில் டீசரை பார்வையிட்டுள்ளனர்.
இந்நிலையில், மும்பையில் இருந்து சென்னை திரும்பிய ரஜினி, போயஸ் தோட்ட இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பேசுகையில், மேகதாது அணை கட்டினால் தமிழகத்திற்கு பாதிப்பு வராது என கூறப்படுவது எந்தளவிற்கு உண்மை என ஆராய வேண்டும். தமிழகத்திற்கு பிரச்னை ஏற்படும் என்றால் அதை சட்டரீதியாக எதிர்கொள்ள வேண்டும். பேட்ட படம் வெளியான பிறகே அடுத்தப்படம் பற்றி முடிவு செய்ய முடியும் என்றார்.
பேட்ட படத்திற்கு பிறகு ரஜினி, முருகதாஸ் படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் அரசியலில் களம் காண இருக்கும் ரஜினி, தொடர்ந்து படங்களில் நடிப்பாரா.? அல்லது, கமல்ஹாசன் போன்று நடிக்க மாட்டேன் என அறிவிப்பாரா.? என்பது பேட்ட வெளியானதும் தெரிந்துவிடும்.