வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
ஹன்சிகா நடித்துள்ள துப்பாக்கி முனை நாளை(டிச.,14) வெளியாகிறது. இதையடுத்து அவரது நடிப்பில் 100, மஹா படங்கள் உருவாகி வருகின்றன. இதில் மஹா படம், ஹன்சிகாவின் 50வது படமாகும். ஜமீல் இயக்குகிறார். சஸ்பென்ஸ் நிறைந்த த்ரில்லர் படமாக மஹா உருவாகிறது.
சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டது. அதில், ஹன்சிகா, சாமியார்கள் போன்று உடையணிந்து புகைப்பிடித்தபடி, கம்பீரமாக அமர்ந்திருக்கும் போஸ்டர் வெளியானது. இந்த போஸ்டரின் பின்னணியில் காசியும், சாமியார்களும் இடம் பெற்று இருந்தனர்.
இந்த போஸ்டருக்கு தற்போது எதிர்ப்பு கிளம்பி உள்ளது. காவி உடை அணிந்து புகைப்பிடிக்கும் ஹன்சிகா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, ராணிப்பேட்டை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது.