ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகர் விஷால் வீடு, மற்றும் அலுவலகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சேவை வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்த டாக்குமெண்ட்டுகளை எடுத்துச் சென்றனர். அதை ஆய்வு செய்ததில் விஷால் ஒரு கோடி ரூபாய் வரை சேவை வரி செலுத்தாதது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் மீது சேவை வரித்துறையினர் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் விஷாலுக்கு பலமுறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாமல் இருந்தார். "கைது செய்ய நேரிடும்" என்று நீதிமன்றம் விடுத்த எச்சரிக்கைக்கு பிறகு, இரண்டு முறை கோர்ட்டில் ஆஜரானார். அப்போது நீபதிகள் குற்றத்தை ஒப்புக் கொண்டு வரியை செலுத்திவிட்டால் வழக்கு முடித்து வைக்கப்படும் என்றனர். அதை ஏற்க மறுத்த விஷால், தான் குற்றமற்றவன் என்று வழக்கை நடத்தி நிரூபிப்பேன் என்றார். இதைத் தொடர்ந்து வழக்கை தொடர்ந்து நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.
நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த முறை விஷால் ஆஜராகவில்லை. ஆஜராகாத காரணத்தை விஷால் வழக்கறிஞர் மனுவாக தாக்கல் செய்தார். அதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் வழக்கை வருகிற ஜனவரி 2ந் தேதிக்கு ஒத்தி வைத்தது.