இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ரஜினியின் பிறந்த நாள் இன்று. அவரது பிறந்த நாளை அவரது குடும்பத்தினர் வீட்டுக்குள்ளேயே கொண்டாடி முடித்துக் கொள்வார்கள். ஆனால் இந்த முறை ரஜினி பிறந்தநாளில் புதிய ஆப் ஒன்றை மனைவி லதா ரஜினி வெளியிடுகிறார்.
லதா ரஜினிகாந்த், தயா பவுண்டேஷன் என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இந்த அமைப்பின் மூலம் பல்வேறு சமூக நலப் பணிகளை செய்து வருகிறார். அதன் ஒரு பகுதி பீஸ் பார் சில்ட்ரன் என்ற பணி. யாருமின்றி கைவிடப்படும் குழந்தைகள், கடத்தப்படும் குழந்தைகளை கண்டுபிடித்து அவர்களுக்கு உதவுகிற அமைப்பு. இந்த அமைப்புக்கு தமிழ்நாடு முழுவதும் பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த அமைப்பின் விழா சமீபத்தில் நடந்தது. இதில் கலந்து கொண்ட ரஜினி, "ஒரு அரசு செய்ய வேண்டிய பணியை என் மனைவி செய்கிறார்" என்று பெருமையுடன் கூறினார்.
இப்போது இந்த அமைப்பின் சார்பில் குழந்தைகள் பாதுகாப்புக்கென பிரத்யேக செயலி ஒன்றை லதா இன்று வெளியிடுகிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
ரஜினி பிறந்தநாளை முன்னிட்டு தயா அறக்கட்டளையும் அதன் அனைத்து உறுப்பினர்களும் மற்றும் உலகத்தில் உள்ள அனைத்து குழந்தைகளின் சார்பாகவும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறோம். மிக சிறப்பான இப்பிறந்தநாளை மேலும் முக்கியமான ஒன்றாக்க இந்நாளில் எங்களது கட்டணமில்லா தொலைபேசி எண்ணையும் குழந்தை பாதுகாப்பிற்கான ஒரு செயலியையும் வெளியிடுகிறோம். இந்நன்னாளில் இதை வெளியிடுவதற்கு ஒப்புதல் கொடுத்த ரஜினிகாந்த் அவர்களுக்கு மீண்டும் எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.