மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
ரஜினிகாந்த், அக்ஷய்குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடித்த '2.0' படம் ஹிந்தியில் டப்பிங் ஆகி வட இந்தியாவில் வெளியானது. தமிழ்நாட்டைவிட ஹிந்தி பேசும் மாநிலங்களில் இந்தப் படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது. அதனால், ஒரு வாரத்திற்கு முன்னதாக ஐந்தே நாட்களில் விரைவாக 100 கோடி வசூலைக் கடந்த 2.0 படம் தற்போது 150 கோடியைக் கடந்துள்ளது.
அமிதாப்பச்சன், ஆமீர்கான் ஆகியோர் நடித்த நேரடி ஹிந்திப் படமான 'தக்ஸ் ஆப் ஹிந்தோஸ்தான்' வசூலையும் '2.0' வசூல் தொகை கடந்துவிட்டது. சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் 2.0 படத்தின் வசூல் வார நாட்களை விட அதிகமாகியுள்ளது. இன்னும் ஒரு வாரம் ஓடினால் ஹிந்தியில் மட்டுமே இந்தப் படம் 200 கோடி ரூபாய் வசூலைக் கடக்கும் என்கிறார்கள்.
அக்ஷய் குமார் படத்தில் இருந்ததால் இது சாத்தியமானது என்ற குரலும் எழாமல் இல்லை. இருப்பினும் ஒரு தமிழ்ப் படம் ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டு முதன்முதலாக 150 கோடி ரூபாய் வசூலைத் தாண்டியது சாதாரண விஷயமல்ல. ஆனாலும், 'பாகுபலி 2' படத்தின் வசூலை '2.0' படம் முறியடிக்க முடியாமல் போனது ரஜினி ரசிகர்களுக்கு வருத்தமான ஒரு விஷயம்தான்.