ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
ரஜினிகாந்த், சிம்ரன், த்ரிஷா, விஜய் சேதுபதி, சசிகுமார், பாபி சிம்ஹா மற்றும் பலர் நடிக்க கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில் பொங்கலுக்கு வெளிவர உள்ள படம் 'பேட்ட'. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று அனைத்து நட்சத்திரங்களும் கலந்து கொள்ள சென்னையில் நடைபெற்றது.
விழாவில் வழக்கம் போல ரஜினிகாந்த் பேச்சு பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் எந்தவிதமான அரசியல் கருத்துக்களையும் கூறாமல் கஜா நிவாரண உதவிகளைப் பற்றி மட்டுமே படத்தைத் தவிர்த்துப் பேசினார்.
'எக்ஸ்ட்ரா'வாக எதுவும் இருக்கக் கூடாது, அப்படி இல்லாமல் இருந்தால் வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும் என்ற கருத்தை மட்டுமே அவர் எக்ஸ்ட்ராவாகப் பேசினார். ஆக, ரஜினிக்கே அரசியல் பற்றி பேசினால் அது எக்ஸ்ட்ரா பேச்சாக இருந்திருக்கம் என சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளது.
ரஜினி அரசியல் பேசாததற்கு காரணம் என்ன என்று கோலிவுட்டில் ஒரு பரபரப்பு உண்டாகி வருகிறது. ரஜினிகாந்தின் அரசியல் பேச்சுக்களால் தான் தமிழ்நாட்டில் 2.0 படத்தின் வசூல் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்ற ஒரு தகவல் உண்டு. அதனால், 'பேட்ட' படத்தைத் தயாரித்துள்ள, நிறுவனம் ரஜினியிடம் படம் தவிர வேறு எதுவும் பேச வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டதாக ஒரு தகவல் இருக்கிறது. அப்படி அவர் ஏதாவது அரசியல் பேசி, இன்னும் ஒரு மாதத்திற்குள் வெளிவர உள்ள படத்தை பாதித்து விடப் போகிறது என்று கேட்டுக் கொண்டார்களாம். அதை மனதில் வைத்து தான் ரஜினிகாந்த் நேற்றைய விழாவில் அரசியல் பேசவில்லை என்கிறார்கள்.