600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா |
ரஜினி பேட்ட படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார் நடிகர் விஜய் சேதுபதி. இசை வௌியீட்டு விழாவில் அவர் பேசியதாவது :
நாம எல்லாரும் கனவு காணுறது வழக்கம் தான். ஆனால் நான் காணாத ஒரு கனவு நடந்தது, அது தான் ரஜினியுடன் இணைந்து நடித்தது சந்தோஷமாக இருக்கிறது. அவர் கூட நடித்ததே பெரிய விஷயம். அவர் கேமரா முன் வந்து நின்றால், அவரை பார்கக நிறைய பேர் இருக்காங்க. ரசிகர்களுக்காக இப்போது வரை அவர் பொறுப்புடன் நடிக்கிறார். அவரைப் போல பொறுப்பான நடிகராக வர வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
கார்த்திக் சுப்பராஜை ஷார்ட் பிலிம் பண்ணும் போதிலிருந்தே தெரியும். ஷார்ட் பிலிம்லயே நிறைய சஸ்பென்ஸ் வைப்பாரு, அடுத்தடுத்த காட்சிகள் சுவாரஸ்யமாக இருக்கும். இந்த படத்துலேயும் அதே மாதிரியான காட்சிகள் நிறையவே இருக்கும். கடைசி காட்சி வரை எல்லாரையும் பிரமிக்க வைப்பார். பேட்டை படத்திலும் எல்லாம் இருக்கு, கடைசி வரை சுவாரஸ்யம் இருக்கும்.
எப்பவுமே பெரிய ஆள எதிர்த்தால் தான் பெரிய ஆளாக முடியும். நான் படத்தில் வில்லன் தான்.
இவ்வாறு விஜய் சேதுபதி பேசினார்.