தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழ்த் திரைப்பட உலகத்தில் நடிகர் விஷால் முன்னெடுத்து ஒரு குழுவைச் சேர்த்து தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் போதே அவருக்கு எதிராக சில நடிகர்கள் செயல்பட்டனர். விஷால் அணியை எதிர்த்து சரத்குமார் அணிக்கு ஆதரவாக சிம்பு பிரச்சாரப் பேட்டி எல்லாம் கொடுத்தார். அதன்பின் விஷால் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ஆகவும் ஆனார்.
ஒரே சமயத்தில் இரண்டு சங்கங்களில் விஷால் முக்கிய பொறுப்பைப் பிடித்தது பல இயக்குனர்களுக்கு பொறாமையாக இருந்தது. அவருக்கு முன்னதாகவே சினிமாவில் அறிமுகமான சில ஹீரோக்கள், விஷாலின் சில நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வந்தனர். குறிப்பாக தயாரிப்பாளர் சங்கத்தில் விஷாலுக்கு எதிராக செயல்படுவதில் பல உள்ளடி வேலைகளைச் செய்ததாக சொல்லப்படுகிறது.
'அன்பானவன் அடங்காதவன் அசராதவன்' படப் பஞ்சாயத்தில் சிம்பு மீது தயாரிப்பாளர் சங்கம் 'ரெட் கார்டு' போடுவது வரை சென்றதாக ஒரு பிரச்சினை நீண்ட காலமாக புகைந்து வருகிறது. அது போலவே 'காலா' பட வெளியீட்டை தான் நினைத்தபடி வெளியிட முடியாமல் தயாரிப்பாளர் சங்கம் முட்டுக்கட்டை போடுவதாக நினைத்த தனுஷ், தற்போது 'மாரி 2' படத்தை தயாரிப்பாளர் சங்க முடிவிற்கு எதிராகவே வெளியிடுகிறார்.
அவரின் பிடிவாதத்தால் கிறிஸ்துமஸ், பொங்கல் நாட்களில் எந்தக் கட்டுப்பாடும் இல்லை என தயாரிப்பாளர் சங்கம் அறிவிக்க வேண்டிய நிலைமை வந்தது. சிம்பு நடித்துள்ள 'வந்தா ராஜாவாதான் வருவேன்' படமும் பொங்கலுக்கு வருவது குறிப்பிட வேண்டிய ஒன்று.
தயாரிப்பாளர் சங்கத்தில் நடக்கும் விவகாரம் குறித்து தன்னுடைய வருத்தத்தை தயாரிப்பாளரும் நடிகருமான விஷ்ணு விஷால் பதிவு செய்திருந்தார். நடக்கும் பிரச்சினைகளுக்கு விஷால் காரணமில்லை, சில உள்குத்து அரசியல் தான் காரணம் என்றார். விதிகளுக்கு கட்டுப்படும் என்னைப் போன்றவர்கள்தான் இதனால் பாதிக்கப்படுகிறார்கள் என குற்றம் சாட்டினார்.
அப்படியென்றால் தயாரிப்பாளர் சங்க விதிகளுக்கு கட்டுப்படாமல் சிம்புவும், தனுஷும் செயல்படுகிறார்களா என்ற கேள்வியும் இப்போது திரையுலகத்தில் பரபரப்பாக எழுந்துள்ளது. பொங்கலுக்குப் பிறகு தயாரிப்பாளர் சங்கம் எடுக்க உள்ள முக்கிய முடிவுகளுக்கு சிம்பு, தனுஷ் நிச்சயம் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்று இப்போதே சிலர் ஆரூடம் சொல்கிறார்கள்.