வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
தாமிரபரணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான மலையாள நடிகை பானு. அதன் பிறகு ரசிகர் மன்றம், அழகர் மலை, சட்டப்படி குற்றம், புதுமுகங்கள் தேவை, மூன்று பேர் மூன்று காதல் உள்பட பல படங்களில் நடித்தார். தேசிங்கு ராஜா, பொன்னர் சங்கர் படங்களில் ஒரு பாட்டுக்கு ஆடினார். 20க்கும் மேற்பட்ட மலையாளப் படங்களில் நடித்துள்ளார். தற்போது சந்திரகுமாரி என்ற தொடரின் மூலம் சின்னத்திரைக்கு வந்திருக்கிறார்.
ராதிகா சரத்குமார், தயாரித்து நடித்து வந்த வாணி ராணி தொடர் 1700 எபிசோட்களுடன் இன்று முடிவடைகிறது. இதையொட்டி அவர் தயாரித்து 7 வேடங்களில் நடிக்கும் சந்திரகுமாரி தொடர் நாளை மறுநாள் (10ந் தேதி) முதல் ஒளிபரப்பாகிறது.
இது பிரமாண்ட சரித்திர தொடர் ஆகும். தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் ஒளிபரப்பாகிறது. இதில் தாமிரபரணி பானு, ராதிகாவின் மகளாகவும், இளவரசியாகவும் நடிக்கிறார். இவர்களுடன் நிரோஷா, உமா ரியாஸ் ஆகியோரும் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். 2 ஆண்டுகளுக்கு முன்பு திருணம் செய்து கொண்டு சினிமாவில் இருந்து விலகி இருந்த பானு, தற்போது தனது சின்னத்திரை பயணத்தை தொடங்கியிருக்கிறார்.