‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
நடிகை வனிதா தனது தந்தை விஜயகுமார் வீட்டை 3 நாள் வாடகைக்கு எடுத்து தான் தயாரிக்கும் படத்தின் படப்பிடிப்பை நடத்தினார். 3 நாட்களுக்கு பிறகு இது என் அம்மாவின் வீடு எனக்கும் பங்கு இருக்கிறது என்று வீட்டை காலி செய்ய மறுத்தார். இதனால் தந்தை விஜயகுமார் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வனிதாவை வெளியேற்றினர். இதனால் வனிதா பூந்தமல்லி கோர்ட்டிலும், உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார். உச்சநீதி மன்றம் வனிதாவுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும். அவரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இந்த உத்தரவை வைத்துக் கொண்டு நேற்று முன்தினம் மீண்டும் விஜயகுமார் வீட்டுக்குள் நுழைந்தார் வனிதா. இது தொடர்பாக விஜயகுமார் நேற்று மீண்டும் மதுரவாயில் போலீசில் புகார் செய்தார்.
"வனிதாவுக்கு பாதுகாப்பு கொடுக்க மட்டுமே சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. அவர் வீட்டுக்குள் நுழைய அனுமதிக்கவில்லை. வனிதா என் வீட்டிற்குள் நுழைந்ததோடு மட்டுமல்லாமல் கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட பொருட்களையும் சேதப்படுத்தி உள்ளார். அவரை வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும்" என்று மனு கொடுத்தார். இதைத் தொடர்ந்து வீட்டுக்குச் சென்ற போலீசார் வனிதாவை வெளியேற்றினர். அவர் மறுத்ததால் அவரை கைது செய்து மதுரவாயல் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.
அவரிடம் விசாரணை நடத்திவிட்டு சொந்த ஜாமீனில் விடுதலை செய்தனர். பின்னர் நேற்று இரவு வனிதா தன் மகளுடன் போலீஸ் கமிஷனர் அலுவலகம் சென்று கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனை சந்தித்து பேசினார்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர் "எனது சொத்து பிரச்சினையை நான் நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்கிறேன். இப்போது எனக்கு பாதுகாப்பு தேவை அதை நான் கமிஷனரிடம் கேட்டிருக்கிறேன்" என்றார்.