ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கிறிஸ்துமஸ், பொங்கல் பண்டிகைகளுக்கு வெளிவர உள்ள புதிய படங்களால் அன்றைய தினங்களில் கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது. அதற்கு முன்னோட்டமாக டிசம்பர் 20, 21ம் தேதிகளில் 6 படங்கள் ரிலீஸ்க்கு மல்லு கட்டுகின்றன.
ஒரே சமயத்தில் இத்தனை படங்கள் மோதுவதை தவிர்க்க தயாரிப்பாளர் சங்கம் சார்பாக கூட்டம் நடந்தது. யாருமே அவர்களது வெளியீட்டுத் தேதியை மாற்றி வைக்க சம்மதிக்கவில்லை. அதனால், தயாரிப்பாளர் சங்கம் கிறிஸ்துமஸ், பொங்கல் பண்டிகையில் தயாரிப்பாளர்கள் அவரவர் விருப்பப்படி படங்களை வெளியிட்டுக் கொள்ளலாம் என அறிவித்தது.
அதன்படி, 20ம் தேதி சீதக்காதி படமும், டிச.,21ம் தேதி, “மாரி 2, அடங்க மறு, கனா, சிலுக்குவார்பட்டி சிங்கம், கேஜிஎப் ஆகிய படங்களும், வெளியாகின்றன.