டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
கேரளாவில் ஆண்டு தோறும் சர்வதேச திரைப்பட விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான 23வது சர்வதேச திரைப்பட விழா இன்று மாலை 6 மணிக்கு தொடங்குகிறது. வருகிற 13ந் தேதி வரை 7 நாட்கள் நடக்கிறது. இதில் 120 நாடுகளைச் சேர்ந்த சுமார் 140 படங்கள் திரையிடப்படுகிறது.
சர்வதேச திரைப்பட விழாவில் தினமும் நடக்கும் விவாத அரங்கில் இயக்குனர்கள் சுவாதி சிந்து மோகன், சுதா, மீனா பிள்ளை, புத்ததேவ தஷ்குப்தா, கமல், மஜித் மஜிதி (ஈரான்), பினா பவுல், உமேஷ் குல்கர்னி, வெங்கடேஸ்வரன், வெற்றிமாறன், ஷாஜி, நடிகையும், இயக்குனருமான நந்திதாதாஸ் ஆகியோர் கலந்து கொண்டு உரையாடுகிறார்கள். இறுதி நாளில் சிறந்த படங்களுக்கு கேரள முதல்வர் பினராய் விஜயன் விருது வழங்குகிறார்.
இந்த விழாவில் வஸந்த் இயக்கி உள்ள, சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் என்ற தமிழ் படம் திரையிடப்படுகிறது. பார்வதி, லட்சுமி பிரியா சந்திரமவுலி, காளீஸ்வரி ஸ்ரீனிவாசன், கருணாகரன், கார்த்திக் கிருஷ்ணா, மாரிமுத்து உள்பட பலர் நடித்துள்ளனர். என்.கே. ஏகாம்பரம் மற்றும் ரவிசங்கரன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்துள்ளனர். எழுத்தாளர்கள் அசோகமித்ரன், ஆதவன் மற்றும் ஜெயமோகன் ஆகியோரின் சிறுகதைகளை கொண்டு இந்தப் படம் தயாராகி உள்ளது. சமீபத்தில் நடந்த மும்பை திரைப்பட விழாவில் பலரின் கவனத்தை ஈர்த்த படம் இது.