ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி |
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த 2.0 படம், உலகம் முழுக்க 500 கோடி வசூல் செய்திருப்பதாக லைகா நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. படம் வெளியான 6 நாட்களில் சென்னையில் மட்டும் சுமார் 13 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
தமிழைவிட தெலுங்கு ஹிந்தியில் 2.0 படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாக சொல்லப்படும் அதே நேரம், அங்கும் சுமாரான வரவேற்பே பெற்றுள்ளது என்ற தகவலும் அடிபடுகிறது. இதற்கிடையில் சென்னையில் பல திரையரங்குகளில் 3டி தொழில்நுட்பத்திலேயே திரையிடப்பட்டுள்ளதால் 2.0 படம் நல்ல வசூல் செய்து வருகிறது.
2.0 படம் வெளியான நவம்பர் 29-ம் தேதி முதல் 6 நாட்களில் சென்னையில் மட்டும் 13 கோடியைக் கடந்து வசூல் செய்துள்ளது. இதன் அடிப்படையில் 2.0 படம் பாகுபலி 2 படத்தின் சென்னை வசூலை முறியடிக்கும் என்று திரையரங்க உரிமையாளர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.
சென்னையில் 2.0 வசூல் சாதனை புரிந்தாலும், தமிழகத்தில் உள்ள பி மற்றும் சி சென்டர்களில் 2டியில் திரையிடப்பட்ட தியேட்டர்களில் மக்களிடம் வரவேற்பில்லை. 2.0 படத்தை 3டியில் காணவே மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால், 2டியில் திரையிட்ட பல தியேட்டர்களில் வசூல் மந்தமாக இருப்பதாக சொல்கின்றனர்.