பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
வைதேகி வந்தாச்சு படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர் சரவணன். அதன்பின்னர் பல படங்களில் கதாநாயகனாக நடித்த அவருக்கு, பருத்திவீரன் முக்கிய படமாக அமைந்தது. தொடர்ந்து குணச்சித்ர நடிகராக வலம் வருகிறார்.
சமீபத்தில் இவருக்கு பன்றி காய்ச்சல் ஏற்பட்டதாக செய்தி வெளியானது. இதை சரவணன் மறுத்துள்ளார். அவர் கூறுகையில், சேலத்தில் இருந்த போது காய்ச்சல் இருந்தது. சிகிச்சை எடுத்து விட்டு சென்னை வந்த போதும் காய்ச்சல் குணமாகாததால் இங்கும் சிகிச்சை எடுத்துக் கொண்டேன்.
குணமாகி வீட்டுக்கு வந்த பின்னர் ஒரு படத்தில் நடித்தும் முடித்துவிட்டேன். ஆனாலும் சிலர் போன் செய்து எனக்கு பன்றி காய்ச்சல் இருப்பதாக நலம் விசாரிக்கின்றனர். அப்படி ஒன்றும் இல்லை, அது சாதாரண காய்ச்சல் தான் என கூறியுள்ளார்.