'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் |
மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி படத்தில் நாயகனாக நடித்தவர் துல்கர்சல்மான். இந்த படம் தெலுங்கில் ஓகே பெங்காரம் என்ற பெயரில் வெளியானது. அதன்பிறகு சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவான மகாநதி படத்தில் ஜெமினி கணேசனாக நடித்தார் துல்கர் சல்மான். இதனால் தற்போது அவர் தெலுங்கு ரசிகர்களுக்கும் நன்கு பரிட்சயமான நடிகராகி விட்டார்.
இந்த நிலையில், தற்போது தெலுங்கில் மோகன் கிருஷ்ணா இயக்கத்தில் தில்ராஜூ தயாரிக்கும் ஒரு இரண்டு ஹீரோ கதையில் நானி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படத்தில் இன்னொரு ஹீரோ வேடத்தில் நடிக்க துல்கர் சல்மானை ஒப்பந்தம் செய்துள்ளனர். ஆனால் அவர் மலையாளம், ஹிந்தி படங்களில் பிசியாக இருப்பதால் துல்கர் சல்மானுக்காக காத்திருக்கிறார் நானி.