விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் |
வருகிற கிறிஸ்துமஸ் தினத்தில் பல படங்கள் போட்டிக் கோதாவில் குதிக்கின்றன. குறிப்பாக, தனுஷின் மாரி-2, ஜெயம் ரவியின் அடங்குமறு, விஜய் சேதுபதியின் சீதக்காதி மற்றும் விஷ்ணு விஷாலின் சிலுக்குவார் பட்டி சிங்கம் ஆகிய படங்கள் வெளியாகின்றன. இதனால் இந்த படங்களை தயாரித்துள்ள நிறுவனங்களுக்கிடையே மல்டி பிளக்ஸ் தியேட்டர்களை கைப்பற்றுவதில் பலத்த போட்டி நடக்கிறது.
இதில், விஜய் சேதுபதியின் சீதக்காதி டிசம்பர் 20ந் தேதியே வெளியாகிறது. தயாரிப்பாளர் சங்கம் அடங்கமறு, பூமராங், சிலுக்குவார்பட்டி சிங்கம் ஆகிய படங்களுக்கு தான் அனுமதி அளித்துள்ளது. மாரி 2 படத்திற்கு அனுமதி கொடுக்கவில்லை.
இதனால் பஞ்சாயத்து நிலவி வரும் சூழலில், தான் தயாரித்துள்ள கனா படமும் வெளியாகயிருப்பதாக அறிவித்துள்ளார் சிவகார்த்திகேயன். ஒரு பரபரப்புக்காக இதை அவர் அறிவித்துள்ளாரா? இல்லை தயாரிப்பாளர் சங்கத்தின் அனுமதி மீறி கனா படத்தை வெளியிடப்போகிறாரா? என்பது விரைவில் தெரியும்.